புத்தகங்கள்-2
இவ்வாறு தொடங்கி பிகேபி யின் காதல் வரிகளுக்கும், சுபாவின் எழுத்துக்கும் ரசிகனானேன். கல்லூரி நாட்களில் வந்தியதேவன் கண்ட பிறகு இதுவரை வேறு யாருக்கும் கதாநாயக இருக்கையை தர மனம் முன்வரவில்லை. இவைகள் எல்லாம் கடந்து, சமூக நாவல் வரிசையில் மனம் சென்றது. திரு. சுஜாதா அவர்களுக்கும் திரு.பால குமாரன் அவர்களுக்கும் என் நன்றிகள். எனக்கு எழுதும் ஆசையைத்தூண்டிய கிரியா ஊக்கிகள் இவர்கள்தான். இவர்களுக்கும் கடிதம் எழுத ஆசைதான். ஆனால் என்ன எழுதுவது என்றுதான் புரிய வில்லை. படிப்பார்களோ இல்லையோ என்ற அவநம்பிக்கை வேறு. கடந்த ஏழெட்டு வருடங்களாக நான் படித்த மிகச்சில எழுத்துக்களுக்கு இவர்களே சொந்தக்காரர்கள். பொன்னியின் செல்வனுக்கு பிறகு, உடையார் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்து கொண்டிருக்கிறது. ஆனால், படிக்க சமயம் கொடுக்க மனதில்லை. புத்தக வடிவில் இல்லாமல், எனது கணினியில் திரையில் உள்ளதாலோ என்னவோ? மேலும், கடந்த 6 மாதமாக 15 நாவல்கள் என் பெட்டியில் உறங்குகின்றன.ஆனால் படிக்கும் பழக்கத்தை கைவிடக்கூடாது என்ற உறுதியுடன் இருக்கின்றேன். படியுங்கள், நல்லதை படியுங்கள், உங்கள் சந்ததிக்கு அதை பழக்கப்படுத்துங்கள். என் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் சில புத்தகங்களை, கதாபாத்திரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ராஜேஷ் குமாரின் விவேக்
சுபா வின் ராணுவ கதைகள், செல்வா.
பிகேபியின் ரோஜா மலரே ராஜகுமாரி
கோ.வி.மணிசேகரனின் காஞ்சிக் கதிரவன்
சுஜாதா --
கணேஷ்--வசந்த், அனிதாவின் காதல்கள், கொலையுதிர்காலம், காந்தளூர் வசந்தகுமாரன் கதை. ஸ்ரீரங்கத்து தேவதைகள்(இணையத்தில் சுஜாதாவின் சிறுகதைகள் என்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் - அருமையான கதைகள்)
பாலகுமாரன் - அப்பம் வடை தயிர்சாதம், தலையணை பூக்கள், என் கண்மணித் தாமரை,இரும்புக்குதிரைகள், சேவல் பண்ணை, பந்தயப்புறா, முன்கதை சுருக்கம், ஆனந்த வயல், திருப்பூந்துருத்தி & உடையார்.
சாண்டில்யன் --
கடல் புறா, யவன ராணி, மன்னன் மகள், ராஜ முத்திரை.
கல்கி - பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம்.







